சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும்  91 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலை யில், கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும்  1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ள தாகவும், மொத்தம் இதுவரை 48,13,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தற்போது, 52,578 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.