சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  4 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரதில் புதியதாக 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 8,40,360 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று மட்டும் 517 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 8,23,518 ஆக உயர்ந்துள்ளது. இது 98.00% ஆகும்.

இன்று தமிழகத்தில் 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12,375 ஆக உயர்நதுள்ளது. இது 1.47% ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 4,467 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 0.53% ஆக உள்ளது.

இன்று மட்டும் 51,882 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,62,28,801 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.