திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 30,491. மற்றும் ஆந்திராவில் 22,610 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 30,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 22,63,960 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 128 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,853 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 44,369 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,38,887 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,17,858 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 22,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,21,142 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 114 பேர் உயிர் இழந்து இதுவரை 9,800 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 23,098 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,02,208 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,09,134 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.