திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 11,196 மற்றும் மகாராஷ்டிராவில் 2,844 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 2,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,44,606 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,962 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,65,277 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,794 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 11,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 46,52,783 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 149 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,810 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,849 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 44,78,042 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,49,402 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.