சென்னை:
மிழகத்தில் இன்று  ஒரே நாளில் 6972  பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில்  1,107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 81,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,852 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக, சென்னையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 12ஆயிரம்பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.