சென்னை:
மிழகத்தில் இன்று  ஒரே நாளில் 6972  பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,617 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 85 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.60 சதவீதமாக உள்ளது.
இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 239 பெரும், மதுரையில் 222 பேரும், திருவள்ளூரில் 222 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒரே நாளில் 61,153 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,75,866 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 4,233 பேர் ஆண்கள், 2,739பேர் பெண்கள். 119பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.