சென்னை

மிழகத்தில் இன்று 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,645,450 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 72,998 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,83,11,295 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,087  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் 3 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  8,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,582 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 610 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,45,178 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.