டில்லி,

சென்னை ஐகோர்ட்டின்  டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை கொண்டு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் இடங்கள் நிரப்பப்பட்டது.

2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் , தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.

ஐகோர்ட்டின் ரத்து உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு கூறியது.