சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.