சென்னை

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதே வேளையில் 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது.வரும் 23 ஆம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்குத் தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.