சென்னை

நேற்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி தவறானது என்பதால் தமிழக காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,

“31.07.2023 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளின் பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் மகளீர் உரிமைத் தொகை வழங்க, ‘மாஸ்டர் பிளான்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறான.

மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது  எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை.

இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”

என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.