சென்னை

ணலி பகுதியில் அமைந்துள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பெயிண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று நண்பகலில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்துக்கு மீஞ்சூர், மணலி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

சுமார் 50க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது/