சென்னை: தமிழக அரசின், புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக, மூத்த ஐஏஎஸ், அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர், முயற்சி மேற்கொண்டனர். இந் நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு பணியில் இருந்த, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்தது. அவர், மத்திய மீன் வளம் கால்நடை, பால்வளத்துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். ராஜிவ் ரஞ்சன் ஏற்கனவே முதல்வர் பொறுப்பில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை செயலாளராக, நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.