தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறையன்பு, ஐ.ஏ.எஸ். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிவதாஸ் மீனா, ஐ.ஏ.எஸ். அவர்களிடம் கோப்புகளை ஒப்படைத்தார்.

அதேபோல் தமிழக காவல்துறை தலைவராக இருந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால், ஐ.பி.எஸ். பதவியேற்றுக்கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, ஐ.ஏ.எஸ். மற்றும் டிஜிபி சங்கர் ஜிவால், ஐ.பி.எஸ். ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதேபோல் இன்று ஓய்வுபெறும் தலைமை செயலாளர் இறையன்பு, ஐ.ஏ.எஸ். மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். ஆகியோரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத்தெரிவித்து விடைபெற்றனர்.