திருச்சி
அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அர்சு மாணவர்களுகு நிபந்தனை விதிக்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இன்று திருச்ச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்,
” கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்துகிறார். மத்திய அரசு தமிழக அரசை பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். கல்வி நிதி வழங்கபடாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோழமை கட்சிகள், மக்கள் அனைவரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இளைய சமுதாயத்தை முன்னிறுத்தி செய்கிறது என்றால் மத்திய அரசு மாணவர்களுக்கு,நிபந்தனைகள் விதிக்கக்கூடாது. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனே நிதியை விடுவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இரு மொழிக்கொள்கையில் படித்த மாணவர்கள் அனைத்து துறைகளிலும் உள்ளனர். இஸ்ரோ உள்ளிட்ட துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள்தான். தரமான கல்வியைத்தான் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. கல்வி இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி வருகிறோம். இருமொழிக்கொள்கையை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வியில் சாதனை படைத்து வருகிறோம். தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை.
தூண்டில் போட்டுவிட்டு மீன் ஏதாவது சிக்காதா என்ற ரீதியில் செயல்படுகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே மும்மொழிக்கொள்கை. மும்மொழிக்கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். மும்மொழியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர் பற்றாக்குறை நடைமுறை சிக்கலை உருவாக்கும். மும்மொழிக்கொள்கை மூலம் வரலாற்றை மாற்ற முயற்சிகள் நடக்கும். நல்ல தலைவர்களாக இருப்பவர்களை கெட்ட தலைவர்களாக மாற்ற முயற்சிப்பார்கள்.
இந்தி இல்லாமல் மூன்றாவது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இந்திய மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். புதிய கல்விக்கொள்கையால் மாணாக்கரின் இடைநிற்றால் அதிகரிக்கும். நிதி அழுத்தம், கொள்கை திணிப்புக்கு பதிலாக கூட்டாட்சி ஒத்துழைப்பை தமிழகம் விரும்புகிறது. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தமிழகத்தில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கின்றன.
56 மொழிகளை இந்தி விழுங்கியுள்ளது. மொழிகளை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்தின் அதிகாரிகளே இந்தியை திணிப்பார்கள் என்று கூறுகின்றனர். புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றிய தமிழகம் முன்னேறியுள்ளது. காலில் சங்கிலியை கட்டி ஓட விடாமல் செய்கிறது மத்திய அரசு.தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை.”
எனக் கூறியுள்ளார்.