டில்லி

ர்நாடகாவில் மாணவர் சமூகத்தை ஹிஜாப் விவகாரம் கூறு போடுவதாகத் தமிழக எம் பி வெங்கடேசன் மங்களவையில் பேசி உள்ளார்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை இந்துத்துவா மாணவர்கள் தடுத்ததை அடுத்து அங்கு கடும் போராட்டம் வெடித்துள்ளது.   நாளுக்கு நாள் போராட்டம் அதிகரிப்பதால் கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.  ஆயினும் மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டத்தை மாணவ மாணவிகள் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் மக்களவையில்,

“தமிழகத்தில்  ஜனவரி 15 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிபரப்பானது.  இந்நிகழ்ச்சி பிரதமரின் மாண்பைக் குறைத்துவிட்டது என்று சொல்லி மத்திய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.

தற்போது கர்நாடகாவில் என்ன நடக்கிறது?   ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. சம வயதினரான மாணவர்களோடு கலந்துரையாடி, சமூக மயமாகும் தேவையிலிருக்கும் மாணவ சமூகத்தின் முன்னுரிமையை குலைத்து போடுகிறார்கள்.

நீங்கள் சிறார்கள் தலையில் கிரீடம் அணியவும் விடமாட்டீர்கள்,  அதைப் போல் மாணவிகள் ஹிஜாப் அணியவும் விடமாட்டீர்கள். உங்கள் உத்தரவுப்படி தான் பள்ளிக் குழந்தைகள் நாடகம் போடுவதும், கல்லூரி மாணவர்கள் ஆடை அணிவதும் நடக்க வேண்டுமா?

ஒரு துண்டு துணியைவைத்து எங்கள் கல்வி உரிமையைப் பறிக்காதீர்கள்” என்று முழங்கினாள் வீரப்பெண் முஸ்கான்.  மேலும் அவர்.  “சக மாணவர்களுக்குத் தண்டனை வேண்டாம், செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்” என்று கூறியுள்ளார்.

அவரது வார்த்தை எந்த மதவெறியையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது.. இது ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை, மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை. இந்த நேரத்தில் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டிய வார்த்தை”

என்று பேசி உள்ளார்.