சென்னை:
தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி இன்று சென்னை வந்தடைந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உம்மன் சாண்டி மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலைவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

இதை தொடர்ந்து கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாளை காலை திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறினார்.

திமுக தலைமையுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, சென்னையில் இன்று மாலை காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.