சென்னை

மிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் பரவி வந்தது.

பள்ளிகள் நாளை  திறக்கப்பட உள்ள நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தினர் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்றாலும் இதுவரை இது குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.