சென்னை:

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசம் வரும் 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு,  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுதிப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ந்தேதி முதல்12ந்தேதி வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.

அதையடுத்து, பொதுமக்கள் கூட்டம் நெரிசலை தடுக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் சில தெருக்களுக்கு வழங்கப்படும் வகையில் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல், வெளியூர் சென்றவர்கள்  பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் வகையில், அதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசு வாங்காதவர்கள், ஜனவரி 21-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.