சென்னை: தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ஒருவாரம் சிறப்புகாட்சிகளுக்கு தமிழகஅரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை (21ந்தேதி) முதல் 27ந்தேதி விரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை 24ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் நாளை (21ந்தேதி) தியேட்டர்களில் வெளியாகிறது. தங்களது ஆசை நாயகனின் படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிங்னறனர். இந்த நிலையில்,   தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (அக்டோபர் 21) ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை திரையிடலாம் எனவும், திரையிடப்படும் காட்சிகள் எண்ணிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு “தீபாவளி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று  தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.