சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு முழுமை பெறாத ஆவணம் என விமர்சித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1942 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஆம் வருடம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது.  எனவே சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை  நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில்

 “இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு  முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்டம் பல்கலைக்கழகங்களிலும் அரசமைப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்”  

என்று கூறி உள்ளார்.