சென்னை

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக டி ஜி பி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் தமிழகக் காவல்துறை தலைவர் நேற்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்

அதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் வருமாறு

“தொடர்ந்து 3 ஆண்டுகள் சொந்த ஊர் மற்றும் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

வரும் 10 ஆம் தேதிக்குள் உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

தேர்தல் பணிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளைத் தேர்தல் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது 

தேர்தல் பணிகளுக்கு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் \ பயன்படுத்தக் கூடாது

மேலும் ஓய்வு பெற்றுப் பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.”

என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN, DGP, Circular, Parliament election,