சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் இறந்தது தொடர்பாக, சாத்தான்குளம் நீதிபதி பி.சரவணன் பணிநீக்கம் செய்யப்பட் வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கே. சந்துரு வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு பொது மக்களின் போராட்டம் வெடித்தது. இந் நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றாத சாத்தான்குளம் நீதிபதி பி.சரவணன் பணிநீக்கம் செய்யப்பட் வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கே. சந்துரு வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் பி.சரவணன், நீதித்துறையின் முறையற்ற செயலுக்காகவும் கைது செய்யப்படும்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியது தெளிவாகவும் உள்ளதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

முதலில் போலீசார் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். நீதிபதி, கைது செய்யப்படும்போது பின்பற்றவேண்டிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் நீதித்துறையின் நடைமுறையை கைவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை என்று சாத்தான்குளம் நீதிபதி தமது பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது.

அவர்கள் கடுமையாக காயமடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அதை அவர் விசாரித்திருக்க வேண்டும். தந்தையும், மகனும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டாலும் நீதிபதி காவல்துறையிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அது நீதிபதியின் வேலை. நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் கைவிட்ட சாத்தான்குளம் நீதிபதியை பணியில் இருந்து நீக்க வேண்டும்.

டிகே பாசு Vs பெங்கால் மாநில வழக்கில் 11 உத்தரவுகளை இந்தியா முழுவதும் வழிகாட்டியாக பின்பற்ற வேண்டியது உச்ச நிதிமன்றம் கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. காவலில் உள்ள எந்தவொரு குற்றவாளியும் அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று நீதிபதியிடம் சொல்ல தைரியம் இருக்காது.

குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சோதிப்பது மாஜிஸ்திரேட்டின் வேலை. அவர்கள் ஏன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள், ஏன் காயங்கள் அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டன?  ரிமாண்ட் செய்யப்படும் முன்பு காவல்துறையினர் அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார்களா? அவர்களுக்கு ஒரு வழக்கறிஞர் இருக்கிறாரா? என்று அவர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை நீதிபதி உறுதி செய்திருக்க வேண்டும்.

முழு அதிகாரமும் இப்போது காவல்துறை மற்றும் அதிகார மையங்களின் கைகளில் இருக்கிறது.  எதிர்க்கட்சித் தலைவர்கூட தனது வீட்டு வாசலில் மட்டும் தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும் என்பது தான் தற்போதுள்ள நிலைமை.

இருப்பினும், நாடார் போன்ற ஒரு சக்திவாய்ந்த வர்த்தக சமூகத்தின் ஆதரவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்புக்களைத் தூண்டியது. ஆனால், இதே போன்ற மீறல்கள் நடந்து கொண்டிருக்கலாம், நீதிமன்றம் கூட இங்கு உதவவில்லை என்று கூறினார்.