தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.

மாவட்ட வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோரின் தரவுகளை பார்க்கும் போது, கடந்த 10 நாட்களில் 19 மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது.

சென்னை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

இந்த தகவலை, கொரோனா தரவு ஆர்வலர் விஜய் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.