சென்னை
நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் சர் பி டி தியாகராயருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்..
இன்று தமிழகம் எங்கும் நீதிக்கடசியின் நிறுவனத் தலைவரான சர் பிடி தியாகராயரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது, இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளட்தில் சிறப்பு பதிவை வெளியிட்டுள்ளார்/.
முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்.
“கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர். `எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ‘வெள்ளுடை வேந்தர்’ எனப் பெயரும் பெற்றவர்.
இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்!”
என்று பதிவிட்டுள்ளார்.