திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

மாநில தலைவர் எம்.பி. சுப்ரமணியன், துணை தலைவர் அசோக் குமார் மற்றும் பொதுச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் பாஜகவில் ஐக்கியமானதாக தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தமிழக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சபீதா என்பவர் பல ஆண்டுகளாக உள்ள நிலையில் எம்.பி. சுப்ரமணியன் குறித்து மேற்கு வங்க திரிணாமுல் எம்.பி. டெரிக் பிரைனிடம் கேள்வி எழுப்பினார் சமூகவலைதள செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர்.

அதற்கு டெரிக் பிரைன் பாஜகவில் இணைந்தவர்கள் யாரும் திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து எங்கிருந்தோ சிலரை அழைத்து வந்து போட்டோ எடுத்து அதை வைத்து மலிவான விளம்பரம் செய்வதை வழக்கமாக கொண்ட பாஜக இந்த முறை ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததாகக் கூறி வசமாக மாட்டிக் கொண்டது என்று சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.