சென்னை

நேற்று தமிழக சட்டசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் யாரும் வரவில்லை.

தமிழக சட்டசபைக் கூட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன.   நேற்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை காலியாக இருந்தன.    நேற்றைய கேள்வி நேரத்தில் இடம் பெற்றிருந்த 10 கேள்விகள் 5 கேள்விகள் காங்கிரஸ் மற்றும் திமுக எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் போது அவர்களுக்கு பதில் ஆளும் ஆதிமுக உறுப்பினர்கள் துணைக் கேள்விகளை கேட்டனர்.   வழக்கமாக எதிர்க்கட்சியினர் கேள்வி நேரம் முடிந்த பின் பிரச்னைகளை கிள்ப்புவது வழக்கம்.  நேற்று எதிர்க்கட்சியினர் யாரும் இல்லாத நிலையில் சுயேச்சை உறுப்பினரான டிடிவி தினகரன் ஒரு பிரச்னையை எழுப்ப முயன்றார்.   ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார்