சென்னை: ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் இயந்திரங்கள் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பனை மேம்பாடு இயக்கத்துக்கு நிதி மற்றும் நம்மாழ்வார் விருதுக்கு நிதி என  பல்வேறு நிதிகளை ஒதுக்கீடு செய்து தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேரவையில் அவர் பேசியதாவது:

ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும், 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தாள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்துக்கு ‘சி’ , ‘டி’ பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய ஆய்வகம் அமைக்கப்படும்.

அசாடிராக்டின் பயன்பாட்டிற்கான வேம்பினை பரவலாக்கம் செய்யும் வகையில் 10 லட்சம் வேப்பமரக்கன்றுகள் இலவசமாக வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு. பனை மரங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பனை மேம்பாட்டு இயக்கத்தினைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், 47 இலட்சம் பனை விதைகள் நடப்பட்டதுடன், 950 நபர்களுக்குத் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு. மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் கருவிகளும் அளிக்கப்பட்டு, 350 மகளிருக்கு பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் கருவிகளும் வழங்கப்பட்டன.

2024-2025ஆம் ஆண்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும். மேலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனைத்தொழிலாளர்களுக்கு, தரமான பனை வெல்லம். பனங்கற்கண்டு, பிற மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும், பயிற்சி பெற்ற அனைவருக்கும் உரிய கருவிகளும் வழங்கப்படும். இதற்கென, ஒரு கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
  • நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
  • மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
  • எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

  • ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
  • விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
  • விவசயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்.
  • கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1775 கோடி ஒதுக்கீடு.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு

  • 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
  • உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
  • முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

  • மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.
  • இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
  • 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்
  • ‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு!
  • ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பயிற்சிபெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு.
  • ‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

  • பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
  • ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
  • சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

  • 2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு உருவாக்கிட ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.
  • மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.
  • அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
  • செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
  • மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.

  • புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
  • புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
  • ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
  • விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.

ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

  • டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.
  • கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

  • உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறாக அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி நிறைவு செய்தார். முன்னதாக அமைச்சர் பட்ஜெட் உரையை திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

வேளாண் பட்ஜெட் தொடர்பான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…

TN Govt Farm Budget –2024-25 Patrikai dot com