கார்தா
மேற்கு வங்க மாநிலம் கார்தா தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் உயிர் இழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதில் இன்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக வாக்கெடுப்பை ஒரே கட்டமாக நடத்த அம்மாநில முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அந்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. தற்போது ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் கார்கா தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் சார்பில் காஜல் சின்கா என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
காஜல் சின்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி காஜல் சின்கா உயிர் இழந்தார். அவரது மறைவு தமக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.