திருப்பதி

திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தன்று 8 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

 

இன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில்,

”வரும் 29 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் இரவு 7.05 மணி முதல் 29-ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை செய்த பின்பு காலை 5.15 மணிக்குப் பிறகு சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஏழுமலையான் கோவில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படும். 

நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். மேலும் திருமலையில் உள்ள அனைத்து தலங்களிலும் அன்ன பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்படும். 

எனவே இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையைத் திட்டமிட வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.