தராபாத்

தொலைக்காட்சி விவாதத்தின் பொது தெலுங்கானா பாஜக வேட்பாளரின் கழுத்தை பி ஆர் எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நெரித்துள்ளார்.

அடுத்த மாதம் 30 ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கிவிட்டது.

தேர்தல் தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவாதம் நடத்தப்பட்டு லைவாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விவேகானந்துக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடாவுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.

விவாதத்தில் ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் ஒரு கருத்தைச் சொல்ல, சட்டமன்ற உறுப்பினர் விவேகானந்துக்கு கடும் ஆத்திரம் வந்து நேராகப் பாய்ந்து சென்று வேட்பாளரை தாக்கினார். அவர் தனது கையில் இருந்த மைக்கை ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வேட்பாளரின் கழுத்தைப் பிடித்து நெரித்தார்.

காவல்துறையினரும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர். தெலுங்கானாவில் இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ