திருப்பதி

திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர்  இழந்துள்ளார்.

 

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஸ்ரீனிவாசன் என்னும் அர்ச்சகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை  பெற்று வந்தார்.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.