திருப்பதி,

திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலயில், திருப்பதி திருமலையில் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கு வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் லட்டு வழங்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.