டில்லி

ன்றுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற அளித்த காலக்கெடு முடிவ்டடைகிறது.

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளைச் செப்டம்பர் 30-தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2000  ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்கென வங்கிகளில் சிறப்புக் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

இன்றுடன் ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.

ஏற்கனவே அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் பெட்ரோல் பங்குகள், டாஸ்மாக் கடைகள்,  திரையரங்குகள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை.

ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், இன்னும் ர்காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.