திருச்சி: திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று (மார்ச் 31ந்தேதி) மேலும்  2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்து. இதனால் தொற்று பாதிப்புக்குள்ளோர் மொத்த எண்ணிக்கை  8,86,673 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையல்  15,879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் தேர்தல் காரணமாக, பிரசார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே பல வேட்பாளர்கள் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது,  திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்   மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.