சென்னை

ந்த வருடம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவாகப் பெய்துள்ளது.

வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை 40 சதவீதம் இயல்பை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார். பாலச்சந்திரன்  இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்

”ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

கடந்த 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 40 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் .1 முதல் நவ.3 வரை மொத்தம் 116.9 மிமீ அதாவது 12 செ.மீ பதிவாகியுள்ளது  இது இயல்பு மழையின் அளவான 193.7(மி.மீ) இருந்து 40 % குறைவானது ஆகும்து 

கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் அதிகளவிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் அதிக மழை பதிவாகியுள்ளது.

இன்று  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி,ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,”

என்று தெரிவித்துள்ளார்.