சூரத்:

சூரத் தீ விபத்தில் 2 மாணவிகளை காப்பாற்றிய கேதான் ஜோராவாடியா என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார்.


சூரத் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தீவிபத்தில், 4-வது மற்றும் 5-வது தளத்தில் இருந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பாதுகாப்பின்றி செயல்பட்டு வந்த பயிற்சி மையங்களை குஜராத் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகளும் மூட உத்தரவிட்டன.

இந்நிலையில், கேத்தா ஜோராவாடியா என்ற இளைஞர், 2 மாணவிகளை காப்பாற்றியதாக சமூக வலைதளங்களில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டு வருகிறார்.

தீ விபத்தின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே இவர் உதவிய வீடியோ வைரலாகி வருகிறது.