நாகை: நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், வெளிநாடுகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை மீட்க சிலை தடுப்பு காவல்துறை என சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, அவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகம், ஏலம் நிறுவனங்களில் உள்ள தமிழக கோவில் சிலைகள் மீட்கப்பட்டு வருகிறன.

இந்த நிலையில், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோவில்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் இருப்பதை தமிழக சிலை தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்க முயற்சி மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.