சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து மதுரையில் இந்து மக்கள் கூடி தங்களது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்துள்ள நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு , இந்த விவகாரத்தை பாஜகவின் பிரிவினைவாத  பாஜக முயற்சி என குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு மூல காரணமே, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி  ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்றதும், அவருடன் சென்றவர்கள் மலைமீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதும், அதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அலப்பறை செய்ததும்  என்பது அனைவரும் அறிந்ததே.  பல ஆண்டு காலமாக ஒற்றுமையாக இஸ்லாமியர்கள் அங்குள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்த நிலையில், ஒரு அமைப்பின் பின்னணியில் சிலரின் எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக, இன்று இரு சமூக மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மற்றும் நவாஸ்கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறை அமைச்சரும்,   இந்துமக்களை ஒன்றிணைத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மீது,  பிரிவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக  குற்றம் சாட்டி வருகின்றனர்.

வட மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்றும்,பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் நமது முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்” அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் முதன்மையான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3000 திற்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. மேலும்,7154 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் .பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம். வடமாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள் நினைக்கிறார்கள். பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் நமது முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.

அவர்கள் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்று நடத்தப்பட்ட போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். பல்வேறு ஊடகங்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அந்த ஊடகங்கள், அப்பகுதியில் வசிக்கின்ற மக்களின் பேட்டிகளை எடுத்திருந்தனர். அதில் பேசிய இஸ்லாமிய, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. தேவையில்லாமல், இந்த பகுதிக்கு வரும் வெளியூரில் இருந்து வருபவர்கள்தான், இப்பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். எனவே, இது தேவையற்ற பிரச்சினை என்று அப்பகுதி மக்களே கூறியிருக்கின்றனர். எனவே, தான் நாங்களும் இது தேவையற்ற பிரச்சினை என்று கருதுகிறோம்.

திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக்கூட்டி, மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்ற பிரச்சினையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையக்கூடும். எச்.ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு சொல்லிக்கொள்கிறேன். முதல்வர் எங்களை அடக்கிவாசிக்க சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவர்கள் வடமாநிலத்தைப் போல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் உறுதிமிக்கவர். எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். இந்த மண்ணில், பெரியார், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்க ஒருகாலமும் அனுமதிக்கமாட்டார்.

திருப்பரங்குன்றம் மலையைப் பொருத்தவரையில், 1920-ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. பின்னர், லண்டன் பிரிவியூ கவுன்சில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து 1958, 1975, 2004, 2017 மற்றும் 2021 என்று பல நேரத்தில் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. தற்போதுகூட, இந்த விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் 7 வழக்குகளில் எதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவு வழங்கியதோ, அந்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசு அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த பிரச்சினையை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் இந்த அரசு செயல்படும். விரைவில் முதல்வரின் அனுமதியோடு துறையின் அமைச்சர் என்ற முறையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருக்கிறேன். கோயிலைப் பொருத்தவரை, 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கில் வரும் தீர்ப்பின் அடிப்படையில், இந்த அரசு அந்த தீர்ப்பின் உத்தரவை மேற்கொள்ளும்.

கோயில் நிர்வாகத்தைப் பொருத்தவரையில், தர்கா தரப்பினருக்கும், வழிபாட்டு முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவே பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை அந்நியப்படுத்தி பாஜக தேர்தல் ஆதாயம் அடையலாம் என்று நினைக்கிறார்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட, ஒரு மதத்துக்கு எதிரான கோஷங்களைத்தான் எழுப்பி னார்கள். மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்தி பேசினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில், ஏற்கெனவே என்ன மாதிரியான வழிபாட்டு வழிமுறைகளை பின்பற்றினார்களோ, அதுவே தொடரும்,” என்று அவர் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்த்து வருகிறார்கள். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கும் தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பா.ஜ.க செயல்படுகிறது.  கோயில் விவகாரத்தில் அரசியல் செய்தால் பா.ஜ.கவுக்கு பூஜ்ஜிய சதம் வாக்குக்கூட கிடைக்காது. ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல. அவர் இரட்டை நாக்கு உடையவர். இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
தேவையின்றி ஆடு கோழிகளை தோளில் சுமந்துகொண்டு மலையேற சென்றவர்களை முதலிலேயே தடுக்க தவறி அறநிலையத்துறை, காவல்துறை, பின்னர், மலைமீது , நவாஸ்கனி ஆய்வு என்ற பெயரில் சென்று தேவையற்றதை பேசியதையும், அங்கு அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதை போஸ்ட் போட்டு பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியதையும்  தடுக்காத தமிழ்நாடு அரசும், காவல்துறையும்,  தற்போது இந்துக்களின் எழுச்சியை கண்டு பிதற்றி வருகிறது.

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்

பிரியாணி சாப்பிடவில்லை: திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வுதான் செய்தோம்! நவாஸ் கனி எம்.பி.