திருநள்ளாறு

ன்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், இங்கு சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  ஆண்டுதோறும் இங்குப் பிரமோற்சவ விழா 18 நாள் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா தொடக்கமாகக் கடந்த மாதம் 24-ந் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு கடந்த 5-ந்தேதி சிறப்புப் பூஜைகளுடன் 5 தேர்களுக்கான தேர்கால் நடப்பட்டது.  இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரும் 21 ஆம் தேதி அன்று பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் தேரோட்டம் 30-ந் தேதியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா 31-ந் தேதியும் நடக்கிறது. ஜூன் மாதம் 1 ஆம் தேதி அன்று விழாவின் நிறைவாக தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.