அபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும்
அபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும், சில தகவல்கள்

அன்னாபிஷேகம் : விளைநிலங்கள், நன்செய் தரும், நாடாளும் வாய்ப்பு அளிக்கும், அரசுடைமை, மோட்ச கதியை அடையலாம்!
அறுகம்புல் ஜலம் : நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்
இளநீர் : நல் சந்ததியளிக்கும், ராஜயோகம் கொடுக்கும், இன்பங்கள் நல்கும்
இளவெந்நீர் : முக்தி
ருத்ராக்ஷ ஜலம் : ஐஸ்வர்யம் பெருகும். ஞானம் பெறலாம்!
எலுமிச்சம் பழச்சாறு : — எமபயம் போக்கும், எமபய நாசம், நட்புடை சுற்றம்
கந்த தைலம் : இன்பம்
கர்ஜூர (பேரீச்சம்பழம்) ரஸம் : சத்ருக்கள் இல்லாமல் போவார்கள்.
கரும்புச்சாறு : ஆரோக்யமளிக்கும், தனம் விருத்தியாகும்.
கஸ்தூரி ஜலம் : சகல யோகங்களும் பெற்று வாழலாம்.
குங்குமப்பூ : சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
கும்ப ஜலம் : பிறவிப்பயன் அளிக்கும்
கொளஞ்சி நாரத்தைப் பழச்சாறு : சோகம் போக்கும்
கோரோசனை : சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
சங்காபிசேகம் : நலம் எல்லாம் அளிக்கும்
சந்தனக் குழம்பு : வற்றாத நிதி (லக்ஷ்மி கடாட்சம்) சேர்க்கும், அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும், சுகம், பெருமை சேர்க்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும்
சர்க்கரை : — பகைகளையும், பகைவரையும் அழிக்கும், சந்தோஷம் பிறக்கும்!
சாத்துக்கொடி பழச்சாறு : துயர் துடைக்கும்
சுத்த ஜலம் : — நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும், விருப்பங்கள் நிறைவேறும்
தங்கம் கலந்த நீர் ( ஸ்வர்ணோதகம்) : சகல சௌபாக்கியம் கிட்டும்
தமர்த்தம் பழச்சாறு : மகிழ்ச்சி தரும்
தயிர் : குழந்தைச் செல்வம் கிட்டும்
தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) : ஞானம் தரும்
திராட்சை ரசம் : — எடுத்த காரியம் வெற்றி தரும், திடசரீரம் அளிக்கும் .
திருநீறு : சகல நன்மையும் தரும்
திருமஞ்சன த்ரவ்யம் : பிணி நீக்கம்
தேங்காய்த்துருவல் : அரசுடைமை
தேன் : சுகமளிக்கும், சங்கீத விருத்தி, குரல்வளம்
நல்லெண்ணெய் : நலம்தரும்
நவரத்தின ஜலம் : தனம் தானியம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும்.
நன்னீர் : தூய்ப்பிக்கும்
நாரத்தம் பழச்சாறு : மந்தர சித்தி ஆகும், ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், சந்ததி வாய்க்கும்
நாவல்பழ ரசம் : வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும்.
நெய் : முக்தியளிக்கும், மோட்சம் அளிக்கும்
நெல்லிப்பருப்புப்பொடி : பிணி நீக்கம்
பச்சரிசி மாவு : கடன் தீரும்
பச்சைக் கற்பூரம் : சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
பசுந்தயிர் : மகப்பேறு வாய்க்கும், தேஜஸ் கூடும்.
பசும்பால் : நீண்ட ஆயுள் தரும், சகல சௌபாக்கியங்களும் ஐசுவரியங்களும் கிடைக்கும்.
பஞ்சகவ்யம் : தீதளிக்கும் ஆன்மசுத்தி, சுத்தம், சகல பாவத்தைப் போக்கும்
பஞ்சாம்ருதம் : பலம், வெற்றி தரும்
பல்லவம் : உலகை வயப்படுத்தும்
பலாப்பழம் : மங்கலம் தரும், யோகசித்தி
பழப்பஞ்சாம்ருதம் : முக்தி, செழிப்பினைத் தரும், செல்வங்கள் பெருகும்
பன்னீர் : சருமம் காக்கும், குளிர்ச்சி தரும்
பஸ்மத்தினால் : மகா பாபங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும்.
பால் : ஆயுள் வ்ருத்தி
புனுகு : சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
புஷ்ப ஜலம் : வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.
மஞ்சள் பொடி : அரச வசியம், நல் நட்பு வாய்ப்பிக்கும்
மஞ்சள் ஜலம் : — மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்
மணமுள்ள தைலம் : சுகம் தரும்
மாதுளம் பழச்சாறு : பகைமை அகற்றும், கோபத்தை நீக்கும்
மாப்பொடி : கடன் நீக்கம்
மாம்பழ ரசம் : தீராத வ்யாதிகள் தீரும், செல்வம், வெற்றி தரும், மகனுக்குச் சீர் சேர்க்கும்
ரசபஞ்சாமிர்தம் : முக்தி
ரத்னம் கலந்த நீர் ( ரத்னோதகம்) : — சகல சௌபாக்கியம் கிட்டும்
வாழைப்பழம் : — பயிர் செழிக்கும்
விபூதி ( திருநீறு) : — சகல ஐஸ்வர்யம் தரும்
வில்வம் கலந்த நீர் ( வில்வோதகம்) : மகப்பேறு தரும், போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.
ஜவ்வாது : சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
கும்பாபிஷேகம் : சித்த சித்தியடைந்து ஈஸ்வர தரிசனம் கிட்டும்
சுவர்ண ஜலம் : முகம் தேஜஸ் பெறும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்!