காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.

கடந்த, 2019 – 20ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.இரு ஆண்டு இடைவெளிக்குபின் நடப்பு ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிலையில், காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.