டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் சபாநாயகர் ஒம்பிர்லாவிடம் தகுதி நீக்கம் (Impecahment) நோட்டிஸ் வழங்கினார்.
இதையடுத்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மததிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே , நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்று விவரிததார்.
கடந்த 2018 முதல் 2025 வரை நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில் 3.8 சதவீதம் பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடந்த நீதிபதிகள் நியமனத்தில் பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் என்று தெரிவித்தவர், கடிந்த 7 ஆண்டுகளில், எஸ்.சி பிரிவில் 32 பேர், எஸ்டி பிரிவில் 17, ஓபிசி பிரிவினர் 103 பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]