சென்னை:
குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதில் குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.