திருச்சி:  கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை திருச்சி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி பகுதியில் அவ்வப்போது வழிப்பறி கொள்ளைகள், பேருந்துகளில் திருட்டு, பிக்பாக்கெட் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்தில்,  திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்தில், பயணிகளைப் போல் பயணித்து நடத்துநரிடம் இருந்து 12 ஆயிரத்து 250 ரூபாய் இருந்த பணப்பையை கொடுமுடி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கும்போது லாவமாகப் பறித்துக்கொண்டு ஓடினர். அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் பயணிகளும் விரட்டிப்பிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நல்லமுறையில் விசாரித்ததில், அந்த 3 பேரும், கடந்த 10 ஆண்டுகளாக பிக்பாக்கெட், கோயில் உண்டியலை உடைப்பது, வீடு புகுந்து திருட்டு, வழப்பறி போன்ற  பல்வேறு கொள்ளைகளை நடத்திய உள்ளது தெரிய வந்ததுள்ளது. அதுபோல,  ஈரோட்டில் காவல்துறையினரின் வாகனத்தை திருடியதும், இஸ்லாமியரின் தர்க்கா உண்டியலை உடைத்து திருட முயற்சித்ததும்  இந்த 3 பேர் கொண்ட கும்பல்தான் என்பதும் தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து  அவர்கள் 3 பேரையும் கைதுசெய்து கொடுமுடி நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.