லக்னோ:  ஞானவாபி மசூதி வாளகத்தில், இந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடை  விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள  காசி விஸ்வநாதர் கோவில்  அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. முந்தைய காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இடிக்கப்பட்டு, அதன்மீது மசூதி கட்டப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துககு வந்துள்ளது.

இந்த நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் ஒருபகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது . இது வரலாற்று ஆவணங்களால் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காசி விஸ்வநாதன் கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ள  மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த மனுக்களை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.

கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது.  ஆனால்,  இஸ்லாமிய அமைப்புகள்,  மசூதி நிர்வாகம் அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த வாரணாசி மாவட்ட  நீதிமன்றம்,  ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி  உத்தரவிட்டது.

வாரணாசி  மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெ ஹமியா மசூதி குழு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு கடந்த மார்ச்  15-ந்தேதி  நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால்  மசூதி கமிஷன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி அலகாபாத்  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து,  ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை   உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ‘ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.