*** ” பிரதமர் பதவி என்பது அதிகாரம் செய்வதற்கு அல்ல… சேவை செய்வதற்குத் தான்.. ” என்று கடந்த 28 ஆம் தேதி நடந்த அரசமைப்புச் சட்ட நினைவு நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி திருவாய் மலர்ந்து இருக்கிறார்!

கட்டுக்கு அடங்காத விலைவாசி, வரிகளை சரமாரியாகப் போட்டு ஏழை மக்களை வதைப்பது,வேலையை தருவதாக வாக்குறுதி கூறி இளைஞர்களை ஏமாற்றுவது, இன… மதச் சண்டை களைத் தூண்டி விடுதல்,இந்தி மொழி ஆதிக்கம்…திணிப்பு,ஆணவ அரசியல்,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்தல் போன்ற அராஜகச் செயல் களோடு….

கொழுத்துப் போயிருக்கும் கார்ப்பொரேட்டுகளுக்குபொதுத் துறை நிறுவனங்களைத் தாரை வார்த்தல்… மற்றும் அவர்களின் 4 லட்சம் கோடி வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்தது ஆகியவற்றைத் தான்…

“மக்களுக்குச் சேவை செய்வது… என்கிறாரோ பிரதமர்! ” என்கிறார்கள் மக்கள்!!

*** ஓவியர் இரா. பாரி.