புதுடெல்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நடைபெற்றது.

இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 14-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர், நாளை முடிவடைவதாக இருந்தது. ஆனால், ஒருநாள் முன்னதாக, இன்று முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமீட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.