திருவனந்தபுரம்,

கேரள நடிகை பாவனாia கடத்தி  பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலிப்புக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமின் வழங்கி உள்ளது.

இதுவரை 4 முறை அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது முறை தாக்கல் செய்தா ஜாமின் மனுமீது விசாரணை முடிவடைந்திருந்த நிலையில் இன்று ஜாமின் வழங்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமின் வழங்கி உள்ளது.

இதன் காரணமாக 86 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு நடிகர் திலிப் வெளியே வருகிறார்.