புதுக்கோட்டை:
க்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றிநடைப் போடும் தமிழகம் என்று முதல்வர் பழனிசாமி விளம்பரம் செய்வது வெற்றிநடை அல்ல, வெற்றுநடைப் போடும் தமிழகம் என விமர்சித்துள்ளார். மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் என்றும் அவர் கூறினார்.  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உறுதி மொழி அளிக்கிறேன் என்றும், உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எனது அரசின் முதல் 100 நாட்கள் அர்ப்பணிக்கப்படும் என்றும் இதற்கு தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.